Pages

Scroll

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்!! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"!!!

Friday, June 17, 2011

காதல்

அம்மம்மா!
கனவு வந்ததே,கவிதை பிறந்ததே,தூக்கம் தொலைந்ததே,
அட இதுதான் இது தான் காதல்,என்பதா?
இது இளமை எழுதும் பருவப் பாடலா?

Thursday, June 16, 2011

வாழ்க்கைத் தத்துவம்

குழம்பு வைக்கும் போது உப்பை மட்டும் அளவாகப் போட வேண்டும். .ஒருவேளை அதிகமாகப் போட்டுவிட்டால் அதை மறைக்க ,தேங்காய் அறைத்து ஊற்றலாம்,வெந்நீர் அதிகம் ஊற்றலாம்.சுவைத்துப் பார்க்கும்போது உப்பு குறைவாகத் தெரியும். ஆனால் குழம்பு எதிர் பார்த்த சுவையைத் தராது.

வாழ்க்கையும் அது போலத்தான்!கவனமமகச் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.ஒருவேளை கொள்கையில்,வாழ்க்கைத் திட்டங்களில் தோல்வி அடைந்துவிட்டால் அத்தோல்வியை வேறு எதைக் கொண்டு சரி செய்தாலும் மனதுக்கு நிறைவைத் தராது.தேங்காயும் ,வெந்நீரும் அதிகமாக ஊற்றிய குழம்பைப் போல.