Pages

Scroll

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்!! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"!!!

Saturday, May 25, 2013

தமிழிலக்கிய வினா - விடை 1000 ,அகர வரிசையில் வெளியிடப்பெற்ற முதல் நூல்

1.          செந்தமிழ் இதழ் தொடங்கிய ஆண்டு  - 1903
2.          செந்தாமரை நாவல் ஆசிரியர்  -  மு.வரதராசன்
3.          செம்பியன் தேவி நாவலாசிரியர்    -  கோவி.மணிசேகரன்
4.          செய்யுள்களைக் காவடிச் சிந்தில் பாடியவர்கள் – வள்ளலார் , அண்ணாமலை ரெட்டியார்
5.          செல்வத்துபயனே ஈதல் – நக்கீரர் – புறநானூறு
6.          சேக்கிழார் இயற்பெயர் – அருண்மொழித்தேவர்
7.          சேது நாடும் தமிழும் நூலாசிரியர் – ரா.இராகவையங்கார்
8.          சேயோன்  - முருகன்
9.          சேர அரசர்களைப் பாடும் சங்க நூல் –பதிற்றுப்பத்து
10.       சேர நாட்டில் ஆடும் கூத்து – சாக்கைக் கூத்து
11.       சேரர் தாயமுறை நூலின் ஆசிரியர் – சோமசுந்தர பாரதியார்
12.       சேனாவரையர் இயற்பெயர் – அழகர்பிரான் இடைகரையாழ்வான்
13.       சைவக் கண்கள் நூல் ஆசிரியர் – ஜி.எம்.முத்துசாமிப் பிள்ளை
14.       சைவசமயக் குரவர்கள்  - நால்வர்
15.       சைவத் திறவுகோல்  நூலாசிரியர் – திரு.வி.க
16.       சைவத்தின் சமரசம் நூலாசிரியர் – திரு.வி.க
17.       சைவம்,அகத்தியம்,சங்கம் என்ற சொல்லை முதலில் குறிப்பிடும் நூல் –மணிமேகலை
18.       சொக்கநாதர் உலா பாடியவர் – தத்துவராயர்
19.       சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுபிள்ள
20.       சொற்கலை விருந்து நூலாசிரியர் – எஸ்.வையாபுரிப்பிள்ளை
21.       சோமசுந்தரக் களஞ்சியாக்கம் நூலாசிரியர் – மறைமலையடிகள்
22.       சோம்பலே சுகம் – பூர்ணம் விசுவநாதன்
23.       சோமு என அழைக்கப் படுபவர் – மீ.ப.சோமசுந்தரம்
24.       சோழ நிலா நாவலாசிரியர் - மு.மேத்தா
25.       ஞாநசாகரம் இதழாசிரியர்மறைமலையடிகள்
26.       ஞான ஏற்றப்பாட்டு பாடியவர் – வேதநாயக சாஸ்திரி
27.       ஞானக் குறள் ஆசிரியர்  -  ஔவையார்
28.       ஞானபோதினி ஆசிரியர் – பரிதிமாற்கலைஞர்
29.       ஞானவெண்பாப் புலிப்பாவலர்     அப்துல் காதீர்
30.       டாக்டருக்கு மருந்து நாடக ஆசிரியர் – பி.எஸ்.ராமையா
31.       டி.கே.எஸ்.சகோதரர்கள் நாடக சபை – மதுரை ஸ்ரீபால ஷண்முகாநந்த சபை
32.       தக்கயாகப் பரணி ஆசிரியர்    ஒட்டக்கூத்தர்
33.       தசரதன் குறையும் கைகேயி நிறையும் நூலாசிரியர்  -   சோமசுந்தரபாரதியார்
34.       தஞ்சைவாணன் கோவை ஆசிரியர் – பொய்யாமொழிப் புலவர்
35.       தண்டி ஆசிரியர்  -  தண்டி
36.       தண்டியலங்கார அணிகளின் எண்ணிக்கை    35 அணிகள்
37.       தண்டியலங்கார ஆதார நூல்காவியரதர்சம்
38.       தண்டியலங்காரத்தின் மூல நூல் – காவ்யதர்சம்
39.       தண்ணீர் தண்ணீர் ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன்
40.       தணிகைபுராணம் பாடியவர் - கச்சியப்ப முனிவர்
41.       தத்துவராயர் பாடிய பள்ளியெழுச்சி – திருப்பள்ளியெழுச்சி
42.       தம் கல்லறையில்இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் ’ என எழுதியவர் ’ – ஜி.யு.போப்
43.       தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் நல்லந்துவனார் செய்யுள் செய்தார் என்றவர்- நச்சினார்க்கினியர்
44.       தம் மனத்து எழுதிப்  படித்த விரகன் - அந்தக்கவி வீரராகவ முதலியார்
45.       தமக்குத் தாமே கூறும் மொழி – தனிமொழி
46.       தமிழ் நாடகப் பேராசிரியர் – பம்மல் சம்பந்தம்
47.       தமிழ் நாட்டில் குகைக் கோயி கள் தோன்றிய காலம் – பல்லவர் காலம்
48.       தமிழ் நாட்டின் மாப்பசான் - புதுமைப்பித்தன்
49.       தமிழ் நாட்டின் ஜேன்ஸ் ஆஸ்டின்அநுத்தமா
50.       தமிழ் நாவலர் சரிதம் எழுதியவர் - கனக சுந்தரம் பிள்ளை
51.       தமிழ் நெறிவிளக்கம் கூறும் இரு பிரிவுகள் – ஆயிடைப்பிரிவு,சேயிடைப் பிரிவு
52.       தமிழ் மதம் நூலாசிரியர் மறைமலையடிகள்
53.       தமிழ் மொழியின் உப நிடதம்தாயுமானவர் திருப்புகழ் திரட்டு
54.       தமிழ் வியாசர் - நம்பியாண்டார் நம்பி
55.       தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவர் – நாமக்கல் கவிஞர்
56.       தமிழ்க் கவிஞருள் அரசர் என வீரமாமுனிவரால் குறிப்பிடப்படுபவர் திருத்தக்கதேவர்
57.       தமிழகத்தில் பழங்காலத்தில் யவனக்குடியிருப்பு இருந்த பகுதி – அரிக்கமேடு
58.       தமிழகத்தில் முதல் அச்சுக்கூடம் நிறுவப்பட்ட ஆண்டு – 1712 தரங்கம்பாடி
59.       தமிழகத்தின் வால்டர் ஸ்காட்கல்கி
60.       தமிழ்ச்சங்கம் இருந்தது என்பதை உறுதிப்படுத்தும் செப்பேடு – சின்னமனூர்ச் செப்பேடு
61.       தமிழச்சி நூலாசிரியர் – வாணிதாசன்
62.       தமிழ்ச்சுடர் மணிகள் நூலின் ஆசிரியர் – எஸ் .வையாபுரிப் பிள்ளை
63.       தமிழ்த்தாத்தா - .வே.சா
64.       தமிழ்த்தென்றல்திரு.வி.
65.       தமிழ்நாட்டின் பழைய நகரமாக வால்மீகி ,வியாசரும் குறிப்பிடுவது – கபாடபுரம்
66.       தமிழ்ப் பண்கள் எண்ணிக்கை – 103
67.       தமிழ்ப் புலவர் சரித்திரமெழுதியவர்பரிதிமாற்கலைஞர்
68.       தமிழ்மாறன் என்று அழைக்கப்படும் ஆழ்வார் - நம்மாழ்வார்
69.       தமிழ்மொழி - பின்னொட்டு மொழி
70.       தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியம் என்று அழைக்கப்படும் சங்க நூல் –புறநானூறு
71.       தமிழன் இதயம் நூலாசிரியர் - நாமக்கல் கவிஞர்
72.       தமிழி – பழைய தமிழ் எழுத்துக்கள்
73.       தமிழிசை இயக்கத்தைத் தொடங்கியவர் – அண்ணாமலை அரசர்
74.       தமிழில் தோன்றிய முதல் உலா நூல் - திருக்கயிலாய ஞான உலா
75.       தமிழில் பாரதம் பாடியவர்  – வில்லிபுத்தூரார்
76.       தமிழில் முதல் சதக இலக்கியம்  –  திருச்சதகம்
77.       தமிழிலக்கிய வரலாற்றை முதலில் ஆங்கிலத்தில் எழுதியவர் – எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை
78.       தமிழின் முதல் நாவல்பிரதாப முதலியார் சரித்திரம்
 மாயூரம் வேத நாயகர்
79.       தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை -  பாரதிதாசன்
80.       தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் நிறுவியவர்சீகன்பால்கு
81.       தர்மனுக்கு ,பாலைக் கோதமனார் அறிவுரை கூறியதாகக் கூறும் பாடல் -  புறநானூறு 366
82.       தரு என்பது – கீர்த்தனங்கள் – இசைப்பாட்டு
83.       தலைச்சங்கப் புலவர் – சக்கரன் எனக் கூறும் நூல் – செங்கோன் தரைச்செலவு
84.       தலைமுறைகள் நாவலாசிரியர் –  நீல .பத்மநாபன்
85.       தலைவன் பிரிந்த நாளை  ,தலைவி சுவற்றில் கோடிட்டு எண்ணும் பாடல்அமைந்த நூல் –நற்றிணை
86.       தவமோ தத்துவமோ நாவல் ஆசிரியர் - கோவி.மணிசேகரன்
87.       தழற்புரை நிறக்கடவுள் தந்த தமிழ் என்று தமிழைச் சிவன் தந்ததாகப் பாடியவர்– கம்பர்
88.       தனிப்பாடல்களின் தொகுப்பு என அழைக்கப்படும் சங்க நூல்கள் – நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு
89.       தாகூரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர்  - .நா.குமாரசாமி
90.       தாண்டக வேந்தர் - திருநாவுக்கரசர்
91.       தாமரைத் தடாகம் நூலாசிரியர்  -  கார்டுவெல் ஐயர்
92.       தாமரைப் பூவிற்கு ஒப்பாகக் கூறப்படும் நகரம் – மதுரை
93.       தாய் அடித்தால் தந்தை உடனணைப்பார் எனப் பாடியவர்  -  வள்ளலார்
94.       தாயுமான சுவாமிகள் கணக்கர் வேலைப் பார்த்த இடம் - விஜயரகு நாத சொக்கலிங்க நாயக்கர் அவை
95.       தாழ்த்தப்பட்டோர் விண்ணப்பம் பாடிய கவிஞர் – கவிமணி
96.       தானைமறம்தும்பை
97.       தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும் கவிதை நூல் ஆசிரியர்  –  நா.காமராசன்
98.       தி.ஜானகிராமனின் சாகித்திய அகாடமி விருது பெற்ற சிறுகதை – சக்தி வைத்தியம்
99.       திண்டிம சாஸ்திரி சிறுகதையாசிரியர் - பாரதியார்
100.   திணைமாலை நூற்றைம்பது ஆசிரியர் - கணிமேதாவியார்
101.   திணைமொழி ஐம்பது ஆசிரியர் – கண்ணன் சேந்தனார்
102.   திரமிள சங்கம் தோற்றுவிக்கப் பட்ட ஆண்டு – கி.பி.470
103.   திரமிள சங்கம் தோற்றுவித்தவர்  - வச்சிர நந்தி
104.   திரமிளம்  என்னும் வடநூலில் இருந்து தமிழ் என்னும் சொல் தோன்றியது எனும் நூல் –பிரயோக விவேகம்
105.   திராவிட சாஸ்திரி - சி.வை.தாமோதரம் பிள்ளை
106.   திராவிட மொழிகளில் அதிகமாகப் பேசப்படும் மொழி – தெலுங்கு
107.   திராவிட மொழிகளில் சிதைவு மொழிகள்  -   பாலி,பிராகிருத மொழிகள்,
108.   திராவிட மொழிகளைத் திருந்திய,திருந்தா மொழிகள் என்றவர் – டாக்டர் கார்டுவெல்
109.   திராவிட வேதம் - திருவாய் மொழி
110.   திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் தமிழ் மொழி பெயர்ப்பாளர் – கா.கோவிந்தன்
111.   திரிகடுகம்  -  சுக்கு,மிளகு,திப்பிலி
112.   திரிகடுகம் ஆசிரியர் – நல்லாதனார்
113.   திரு.வி..நடத்திய இதழ்கள் – தேசபக்தன், நவசக்தி
114.   திருக்கச்சூர் நொண்டி நாடகம் எழுதியவர் – மாரிமுத்துப் புலவர்
115.   திருக்கண்னப்ப தேவர் திருமறம் நூலாசிரியர்கல்லாடர்
116.   திருக்குறள் குமரேச வெண்பா எழுதியவர் - ஜெகவீர பாண்டியர்
117.   திருக்குறளாராய்ச்சி நூலாசிரியர் – மறைமலையடிகள்
118.   திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் – ஜி.யு.போப்/வ.வே.சு.ஐயர்/தீட்சிதர்/ராஜாஜி
119.   திருக்குறளை இலத்தீனில் மொழிபெயர்த்தவர் – வீரமாமுனிவர்
120.   திருக்குறளை ஜெர்மனியில் மொழிபெயர்த்தவர் – டாக்டர் கிரால் / கிராஸ்
121.   திருக்குற்றாலநாதர் உலா எழுதியவர் – திரிகூடராசப்பக் கவிராயர்
122.   திருக்கோவைப் பாடல் எண்ணிக்கை - 400 பாடல்கள்
123.   திருகுருகைப் பெருமாளின் இயற்பெயர் - சடையன்
124.   திருச்சீரலைவாய் என்றழைக்கப் படும் ஊர்திருச்செந்தூர்
125.   திருஞான சம்பந்தம் உலா ஆசிரியர் – நம்பியாண்டார் நம்பி
126.   திருஞானசம்பந்தர் கால நிச்சயம் நூலாசிரியர்பெ.சுந்தரம் பிள்ளை
127.   திருத்தி எழுதிய தீர்ப்புகள் கவிதை நூலாசிரியர் – வைரமுத்து
128.   திருத்தொண்டர் திருவந்தாதி பாடியவர்  -  நம்பியாண்டார் நம்பி
129.   திருந்தாத திராவிட மொழிகளில் அதிகமாகப் பேசப்படும் மொழி - கோண்டா
130.   திருநாவுக்கரசரால் சைவத்திற்கு மாறிய மன்னன் - மகேந்திர வர்மன்
131.   திருநாவுக்கரசரின் இயற் பெயர் – மருள்நீக்கியார்
132.   திருநாவுக்கரசருக்கு சமண மதத்தில் கொடுக்கப்பட்ட பட்டம் – தருமசேனர்
133.   திருநாவுக்கரசரைத் துன்புறுத்திய மன்னன் – மகேந்திரவர்மன்
134.   திருநெல்வேலி சரித்திரம் எழுதியவர் -  டாக்டர் கார்டுவெல்
135.   திருப்பள்ளி எழுச்சி பாடிய நாயன்மார் – மாணிக்கவாசகர்
136.   திருப்பனந்தாள் காசிமடத்தை நிறுவியவர் – தில்லைநாயகசுவாமிகள் 1720
137.   திருப்பாதிரியூர்க் கலம்பக ஆசிரியர் – தொல்காப்பியத் தேவர்
138.   திருப்புகழ் பாடியவர்  - அருணகிரி நாதர்
139.   திருமங்கை ஆழ்வார் மன்னராக வீற்றிருந்த நாடு – திருவாலிநாடு
140.   திருமங்கை ஆழ்வாரின் இயற்பெயர் – கலியன்
141.   திருமந்திரம் பாடல் எண்ணிக்கை – 3000
142.   திருமழிசைஆழ்வார் இயற்பெயர்      - பக்திசாரர்
143.   திருமால் வாணாசூரனின் சோ எனும் அரணைச் சிதைத்தது - கந்தழி
144.   திருமுருகாற்றுப்படை ஆசிரியர்  – நக்கீரர்
145.   திருவள்ளுவ மாலைக்கு உரை எழுதியவர் – சரவணப் பெருமாள் ஐயர்(1869)
146.   திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் நூல் ஆசிரியர் – மு.வரதராசன்
147.   திருவள்ளுவரைப் போற்றும் சைவசித்தாந்த நூல் – நெஞ்சு விடு தூது
148.   திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யூ.போப்
149.   திருவாசகப் பாடல் எண்ணிக்கை        - 656
150.   திருவாரூர் பள்ளு, முக்கூடற் பள்ளு ஆசிரியர் – திரிகூட ராசப்பர்
151.   திருவாவடுதுறை  ஆதீன மடத்தை நிறுவியவர் – நமச்சிவாய மூர்த்தியார்
152.   திருவிளையாடற் புராணத்தின் மூல நூல் - ஹாலாஸ்ய மான்மியம்
153.   திருவெங்கை உலா ஆசிரியர்சிவப்பிரகாச சுவாமிகள்
154.   திருவேரகம் –  சுவாமிமலை
155.   திருவொற்றியூர் ஒருபா ஒருபது பாடியவர் - பட்டினத்தார்
156.   தில்லானா மோகனாம்பாள் நாவலாசிரியர் – கொத்தமங்கலம் சுப்பு
157.   தில்லைநாயகம் நாடக ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன்
158.   திவ்யகவி என அழைக்கப்பெறுபவர் –  பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
159.   தின வர்த்தமானி இதழாசிரியர் - பெர்சிவல் பாதிரியார்
160.   துன்பியல் நாடக முடிவை முதன் முதலில் காட்டியவர் – பம்மல் சம்பந்தம்
161.   தெந்தமிழ்நாட்டுத் தீதுதீர் மதுரை எனக் கூறும் நூல் – சிலம்பு
162.   தென்பிராமியின் மற்றொரு பெயர்திராவிடி
163.   தென்றமிழ்த் தெய்வப் பரணி எனக் கூறப்படும் நூல் – கலிங்கத்துப் பரணி
164.   தென்னவன் பிரமராயனெனும்
165.   தேசபக்தன் கந்தன் நாவலாசிரியர் - கே.எஸ்.வெங்கட்ரமணி
166.   தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த ஊர் – தேருர் – 1876
167.   தேம்பாவனி அறங்கேற்றப்பட்ட இடம் – மதுரை
168.   தேம்பாவனி எழுதியவர் வீரமாமுனிவர்
169.   தேரோட்டியின் மகன்   நாடகாசிரியர் - பி.எஸ்.ராமையா
170.   தேவயானப் புராணம் பாடியவர் – நல்லாப்பிள்ளை
171.   தேவருலகிலிருந்து பூவுலகிற்குக் கரும்பு கொண்டு வந்த பரம்பரை
 – அதியமான்
172.   தேவாரப் பண்களை வகுத்தவர்கள் – திரு நீலகண்ட யாழ்ப்பாணர் ,அவரது மனைவி மதங்கசூளாமணி
173.   தேன் மழைக் கவிதைத்தொகுப்பு       - சுரதா
174.   தொகையும் பாட்டும் பிறந்த காலம் – கடைச்சங்க காலம்
175.   தொடக்க காலத்தமிழ் எழுத்துக்கள் -   தமிழி
176.   தொண்டர் சீர் பரவுவார் – சேக்கிழார்
177.   தொண்டைமண்டலச் சதகம் பாடியவர் – படிக்காசுப் புலவர்
178.   தொல்காப்பிய ஆராய்ச்சி ,தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பு ஆசிரியர் – சி.இலக்குவனார்
179.   தொல்காப்பிய இயல்களின் எண்ணிக்கை 27
180.   தொல்காப்பிய பொருளதிகார உரை முதலில் வெளியிட்டவர்
 – பூவிருந்தவல்லி க.கன்னியப்ப முதலியார்
181.   தொல்காப்பிய மூலம் கையடக்க பதிப்பு வெளியிட்டவர்
– சி.புன்னைவன நாத முதலியார் – 1922
182.   தொல்காப்பிய மெய்ப்பாடுகள் –  8
183.   தொல்காப்பியக் கடல்,தொல்காப்பியத்திறன் கட்டுரைத் தொகுப்பாசிரியர் - வ.சுப.மாணிக்கனார்
184.   தொல்காப்பியச் சண்முக விருத்தி நூலாசிரியர் – செப்பறை சிதம்பர சுவாமிகள்
185.   தொல்காப்பியச் சூத்திர விருத்தி எழுதியவர் – மாதவச் சிவஞானமுனிவர்
186.   தொல்காப்பியத்தில் உள்ள பேராசிரியர் உரை
 – பொருளதிகாரம்  இறுதி நான்கு இயல்கள்
187.   தொல்காப்பியத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியார் உரை
– அகத்திணையியல்,புறத்திணையியல்,மெய்ப்பாட்டியல்
188.   தொல்காப்பியத்தில் புலவர் குழந்தை உரை – பொருளதிகார உரை
189.   தொல்காப்பியப் பாயிரம் பாடியவர் – பனம்பாரனர்
190.   தொல்காப்பியம் அரங்கேற்றத் தலைமையேற்றவர் – அதங்கோட்டாசான்
191.   தொல்காப்பியம் குறித்து ஆராய்ந்தவர் – க.வெள்ளைவாரனார்
192.   தொல்காப்பியம் குறிப்பிடும் தமிழ் எழுத்துக்கள் – 33
193.   தொல்காப்பியம் சுட்டும் இலக்கிய வகைமையின் பெயர் – வனப்பு
194.   தொல்காப்பியம் சுட்டும் தாமரை, வெள்ளம்,ஆம்பல்
 – எண்ணுப்பெயர்கள் (பேரெண்கள்)
195.   தொல்காப்பியம் –நன்னூல் முதல் ஒப்பீட்டு நூல் வெளியிட்டவர்
-க.வெள்ளைவாரனார்
196.   தொல்காப்பியர்நாட்டம் இரண்டும்  கூட்டியுரைக்கும் குறிப்புரைஎனக் கூறுவது  – கண்கள்
197.   தொல்காப்பியர் குறிப்பிடும் சார்பெழுத்துக்கள் – 3
198.   தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் – 20
199.   தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் – 20
200.   தொல்காப்பியர் சுட்டும் இடைசெருகல் ஆசிரியர்கள்
  –கந்தியார்,வெள்ளியார்
201.   தொல்காப்பியர் சுட்டும் விடுகதையின் பெயர் – பிசி
202.   தொல்காப்பியர் பன்னிருபடலம் எழுதுவதில் பங்குபெறவில்லை என்றவர் – இளம்பூணர்
203.   தொல்காப்பியரின் இயற்பெயராக நச்சினார்க்கினியர் கூறுவது
-திரணதூமாக்கினியார்
204.   தொல்காப்பியரின் இயற்பெயரான திரணதூமாக்கினியாரின்  தந்தை
 – சமதக்கினி
205.   தொல்காப்பியரை வைதிக முனிவர் என்று சுட்டுபவர்
– தெய்வச்சிலையார்
206.   தொல்காபிய உரைவளத் தொகுப்பு – ஆ.சிவலிங்கனார்
207.   தொன்னூல் விளக்கம் ஆசிரியர் – வீரமாமுனிவர்
208.   தொன்னூல் விளக்கம் எழுதியவர் வீரமாமுனிவர்
209.   தொன்னூற்றொன்பது வகை மலர்களைப் பற்றிக் கூறும் நூல்
– குறிஞ்சிப்பாட்டு
210.   தோகை, கவி என்ற தமிழ்ச் சொற்கள் ஹீப்ரு மொழியில் வழங்கப்படுவது – துகி,சுபி
211.   நண்டும் தும்பியும் நான்கறி வினாவே ” எனும் நூல் – தொல்காப்பியம்
212.   நந்தர், மோரியர் குறிப்புகளைக் காட்டும் நூல் – அகநானூறு
213.   நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் எழுதியவர் – கோபால கிருஷ்ணபாரதியார்
214.   நந்திக்கலம்பகம் எழுதப்பட்ட ஆண்டு –  கி.பி.880
215.   நந்திபுரத்து நாயகி நாவலாசிரியர் - அரு.இராம நாதன்
216.   நந்திவர்மன் காதலி நாவலாசிரியர் ஜெகசிற்பியன்
217.   நந்திவர்மன் மீது பாடப்பட்ட கலம்பகம் – நந்திக்கலம்பகம் 
218.   நம்பியகப் பொருள் எழுதியவர் -         நாற்கவிராச நம்பி
219.   நம்மாழ்வார் ( மாறன்) அழைக்கப்படும் அலங்கார நூல் - மாறனலங்காரம்
220.   நமர்  - ஒற்றர்
221.   நரிவிருத்தம் பாடியவர் திருத்தக்கத்தேவர்
222.   நல்லது செய்தல் ஆற்றிராயின் அல்லது செய்தல் ஓம்புமின்
 – நரிவெரூவுத்தலையார் – புறநானூறு
223.   நல்லது செய்தல் ஆற்றீராயினும், அல்லது செய்தல் ஓம்புமின் எனும் நூல் – புறநானூறு
224.   நவக்கிரகம் படைப்பாளி – கே.பாலச்சந்தர்
225.   நவநீதப்பாட்டியலின் ஆசிரியர் – நவநீத நடனார்
226.   நளவெண்பா ஆசிரியர் புகழேந்திப்புலவர்
227.   நளவெண்பா காண்டங்கள் – 3
228.   நளவெண்பாவின் மூல நூல்- நளோபாக்கியானம்
229.   நற்கருணைத் தியான மாலை ஆசிரியர் கார்டுவெல்
230.   நற்றாய் கூற்று இடம்பெறும் முதல் அகப்பொருள் நூல் – தமிழ்நெறி விளக்கம்
231.   நற்றிணை அடி வரையறை – 9 - 12
232.   நற்றிணை எப்பொருள் பற்றிய நூல் – அகப்பொருள்
233.   நற்றிணையப் பாடிய அரசர்கள் எண்ணிக்கை – 3   { அறிவுடைநம்பி, உக்கிரப்பெருவழுதி,பாலைபாடிய பெருங்கடுங்கோ }
234.   நற்றிணையில் அடிகளால் பெயர்பெற்றவர்கள் – 7 பேர் –தேய்புரிப்பழங்கயிற்றியனார்,மடல் பாடிய மருதங்கீரனார்,
235.   வண்ணப்புறக்கந்தரத்தனார், மலையனார், தனிமகனார், விழிகட்பேதையார்,பெருங்கண்ணனார் , தும்பிசேர்கீரனார்
236.   நற்றிணையில் அமைந்த பாடல்கள்  - 400
237.   நற்றிணையில் பாடல் தொடரால் பெயர் பெற்றோர் – 7
238.   நற்றிணையில் முழுதும் கிடைக்காத பாடல் – 234 –ஆம் பாடல்
239.   நற்றிணையின் பாவகை – அகவற்பா
240.   நற்றிணையின் முதல் உரையாசிரியர் – பின்னத்தூர் நாராயணசுவாமி ஐயர்
241.   நற்றிணையின் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்
242.   நற்றிணையைத் தொகுப்பித்தவன் – பன்னாடு தந்த மாறன்வழுதி
243.   நற்றிணையைப் பாடிய புலவர்கள் – 175
244.   நற்றிணையைப் பாடிய புலவர்களின் பெயர்கள் தெரியவரும் பாடல் எண்ணிக்கை - 192
245.   நறுந்தொகை எனும் நூல் - வெற்றி வேட்கை
246.   நன்னூல் ஆசிரிய விருத்தத்தின் வேறு பெயர் – உரையறி நன்னூல்
247.   நன்னூல் ஆசிரிய விருத்தம் எழுதியவர் – ஆண்டிப்புலவர்
248.   நன்னூல் காண்டிகை உரை எழுதியவர் – முகவை இராமாநுசக் கவிராயர்
249.   நன்னூல் காலம் - 13-ஆம் நூற்றாண்டு
250.   நன்னூல் கூறும் நூலின் உத்திகள் – 32
251.   நன்னூல் கூறும் மாணாக்கர் வகை. – மூவகை மாணாக்கர்
252.   நன்னூலாசிரியர் - பவணந்தி முனிவர்
253.   நன்னூலுக்கு விருத்தப்பாவில் உரை எழுதியவர் – ஆண்டிப்புலவர்
254.   நன்னூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – இலாசரஸ்
255.   நாக நாட்டரசி நாவலாசிரியர் மறைமலையடிகள்
256.   நாச்சியார் திருமொழி பாடியவர் ஆண்டாள்
257.   நாடக அரங்கங்களை மூடுமாறு சட்டமியற்றிய நாடு – இங்கிலாந்து
258.   நாடக வழக்கும் ” என்ற தொடர் இடம்பெற்ற நூல் – தொல்காப்பியம்
259.   நாடகக் காப்பியம் -                 சிலப்பதிகாரம்
260.   நாடகத் தலைமை ஆசிரியர் – சங்கரதாஸ் சுவாமிகள் - 40 நாடகங்கள்
261.   நாடகம் வழக்கிழந்த காலம் – இருண்ட காலம்
262.   நாடகம் வளர்ச்சி குன்றிய காலம் – ஜைன் ,பௌத்தக் காலம்
263.   நாடகமேடையில் நடிகர்களை அறிமுகப்படுத்துபவன் – கட்டியங்காரன்
264.   நாடகவியல்,நாடக இலக்கண ஆசிரியர் – பரிதிமாற்கலைஞர்
265.   நாட்டியத் தர்மி என்ற சொல்லே நாடகம் என்றவர் – எஸ்.வையாபுரிப்பிள்ளை
266.   நாணல் நாடக ஆசிரியர் – கே.பாலச்சந்தர்
267.   நாதமுனிகள் பிறந்த ஊர் – வீரநாராயணபுரம்
268.   நாமக்கல் கவிஞரின் சுயசரிதை - என் கதை -வே.இராமலிங்கம் பிள்ளை
269.   நாலடியாரை மொழி பெயர்த்தவர் – ஜி.யு.போப்
270.   நாலாயிரக்கோவை பாடியவர் – ஒட்டக்கூத்தர்
271.   நாலாயிரத்திவ்யபிரபந்தத்தைத் தொகுத்தவர் நாதமுனிகள்
272.   நாவலாசிரியை லட்சுமி இயற்பெயர் – திரிபுரசுந்தரி
273.   நாவுக்கரசர் பாடிய பதிக எண்ணிக்கை – 311
274.   நாற்கவிராச நம்பியின் இயற்பெயர் - நம்பி நாயனார்
275.   நான்மணிக்கடிகை நூலாசிரியர் – விளம்பி நாகனார்
276.   நிகண்டுகள் அமைய அடிப்படையானது – தொல்காப்பிய உரியியல்,மரபியல்
277.   நினைவு மஞ்சரி நூலாசிரியர் – உ.வே.சா.
278.   நீதி தேவன் மயக்கம் நூலாசிரியர் - அறிஞர் அண்ணா
279.   நீரும் நெருப்பும் கவிதைத் தொகுப்பாசிரியர் – சுரதா
280.   நீலகேசி உரையின் பெயர் – நீலகேசி விருத்திய சமய திவாகரம்
281.   நூற்றெட்டுத் திருப்பதிக் கோவை  எடுத்துக்காட்டு நூல் – மாறனலங்காரம்
282.   நெஞ்சறிவுறுத்தல் பாடியவர் – வள்ளலார்
283.   நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படும் நூல் - முல்லைப்பாட்டு
284.   நெஞ்சில் ஒரு முள்  நாவலாசிரியர் – மு.வரதராசன்
285.   நெஞ்சுக் கலம்பகம் பாடியவர்- புகழேந்திப் புலவர்
286.   நெடு நல்வாடை ஆசிரியர் - நக்கீரர்
287.   நெடு நல்வாடை நூலின் அடிகள் 183
288.   நெடுங்கடை  - வீட்டின் முன்
289.   நெடுந்தொகை  - அகநானூறு
290.   நெடுநல்வாடை ஆராய்ச்சி  நூலாசிரியர் – கே.கோதண்டபாணிப் பிள்ளை
291.   நெடுமொழி - தற்புகழ்ச்சி
292.   நெல்லும் உயிரன்றே ,நீரும் உயிரன்றே,மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் – மோசிகீரனார்- புறநானூறு
293.   நேமி நாத இலக்கண நூலாசிரியர் - குணவீர பண்டிதர்
294.   நேர்,நிரை அசைகளை தனி,இணை என்றவர் – காக்கைப்பாடினியார்
295.   பக்திச்சுவை உணர்த்தும் நூல் –திருமுருகாற்றுப்படை
296.   பகை நாட்டை கொள்ளையடித்தல் -மழபுல வஞ்சி                             
297.   பகைவர் மகளிர் கூந்தலைக் கயிறாக்கி யானைகளைக் கட்டி இழுக்கும் செய்தி இடம் பெற்ற நூல் - பதிற்றுப் பத்து
298.   பங்கிம் சந்திரரின் வந்தே மாதரம் வங்கப் பாடலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் -- பாரதி
299.   பச்சை மாமலைபோல் மேனி –என்று பாடியவர் – தொண்டரடிப்பொடியாழ்வார்
300.   பட்டத்து யானை கவிதை நூல் ஆசிரியர் – நா.காமராசன்
301.   பட்டினப்பாலை ஆசிரியர் - கடியலூர் உருத்திரங்கண்ணனார்
302.   பட்டினப்பாலை பாட்டுடத்தலைவன் கரிகாற்பெருவளத்தான்
303.   பட்டினப்பாலையின் வேறு பெயர் – வஞ்சிநெடும்பாட்டு
304.   பண் வகுக்கப் பெற்ற சங்க நூல் – பரிபாடல்
305.   பண்டிதமணி என அழைக்கப் படுபவர் - மு.கதிரேசன் செட்டியார்
306.   பண்டைத் தமிழ் எழுத்துக்கள் நூலாசிரியர் - நா.சுப்பிரமணியன்
307.   பண்டைத்தமிழரும் ஆரியரும் நூல் ஆசிரியர் – மறைமலையடிகள்
308.   பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் கலித்தொகை
309.   பணவிடு தூது பாடியவர் - சரவணப் பெருமாள் கவிராயர்
310.   பத்தாம் திருமுறை - திருமந்திரம்
311.   பத்திற்றுப் பத்தில் கிடைக்காத பத்து – முதல் பத்து,பத்தாம் பத்து
312.   பத்துக்கம்பன் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்
313.   பத்துப்பாட்டிலுள்ள புற நூல்கள் – 7
314.   பத்துப்பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
– ஜெ.வி.செல்லையா –இலங்கை
315.   பத்மஸ்ரீ விருது பெற்ற நாடகக்கலைஞர் – டி.கே.சண்முகம்
316.   பத்மாவதி சரித்திரம் எழுதியவர் - அ.மாதவையா
317.   பதிற்றுப் பத்தால் பாடப்படும் மன்னர்கள் – சேரமன்னர்கள்
318.   பதிற்றுப் பத்தில் 2 -6 ஆம் பத்துக்கள் போற்றும் குடி – உதியஞ்சேரல் குடி
319.   பதிற்றுப் பத்தில் 7 -9 ஆம் பத்துக்கள் போற்றும் குடி – இரும்பொறை மரபு
320.   பதிற்றுப் பத்தில் அந்தாதி முறையில் அமைந்த பத்து -  நான்காம் பத்து
321.   பதிற்றுப் பத்தில் ஆறாம் பத்து பாடியவர் – காக்கைப் பாடினியார்
322.   பதிற்றுப் பத்தில் இரண்டாம் பத்தை பாடியவர் - குமட்டூர்க் கண்ணனார்  
323.   பதிற்றுப் பத்தில் நான்காம் பத்தைப் பாடியவர் – காப்பியாற்றுக் காப்பியனார்
324.   பதிற்றுப் பத்து  திணை - பாடாண்திணை
325.   பதிற்றுப் பத்து எட்டாம் பத்து பாடியவர் ,பாடப்பட்டவர்
– அரிசில்கிழார்   / தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
326.   பதிற்றுப் பத்து ஏழாம்பத்து பாடியவர் ,பாடப்பட்டவர்
 – கபிலர் / செல்வக்கடுங்கோ வாழியாதன்
327.   பதிற்றுப் பத்து கடவுள் வாழ்த்துப் பாடியவர் – நச்சினார்க்கினியர்
328.   பதிற்றுப் பத்து பாடிய பெண்பாற் புலவர் – காக்கைப்பாடினியார்,நச்செள்ளையார்
329.   பதிற்றுப் பத்து முதன்முதலில் பதிப்பித்தவர் – உ.வே.சா
330.   பதிற்றுப் பத்துப் பாடல்களின் அடிக்குறிப்பில் உள்ளவை- துறை,வண்ணம்,தூக்கு( இசை)
331.   பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்துப் பாடியவர் – பரணர்
332.   பதிற்றுப்பத்தில் மூன்றாம் பத்தின் தலைவன் –  இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
333.   பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள்  ஒரே புற நூல் - களவழி நாற்பது
334.   பம்மல் சம்பந்தம் நாடக சபா – சுகுண விலாச சபா
335.   பரணி நூலின் உறுப்புக்கள்- 13
336.   பரமார்த்த குரு கதையாசிரியர்வீரமாமுனிவர்
337.   பரிபாடல் அடி வரையறை - 25-400 வரை
338.   பரிபாடல் பாடிய புலவர்களின் எண்ணிக்கை – 13
339.   பரிபாடலில் தற்போது கிடைத்துள்ள பாடல் எண்ணிக்கை – 22
340.   பரிபாடலில் வருணிக்கப்படும் நகரம் –மதுரை
341.   பரிபாடலின் பழைய உரைகாரர் – பரிமேலழகர்
342.   பரிபாடலின் மொத்தப் பாடல்கள்– 72 ( எழுபது பரிபாடல் என்பது இறையனார் அகப்பொருள் உரை)
343.   பரிபாடலுக்குப் பண்ணிசைத்தவர் எண்ணிக்கை- 10
344.   பரிமேலழகரின் உரை சிறப்பைக் கூறும் நுண்பொருள்மாலை ஆசிரியர்– திருமேனி ரத்தினக் கவிராயர்
345.   பல்கலைச் செல்வர் என்றழைக்கப்படுபவர்
 - தெ.பொ.மீனாட்சி சுந்தரம்
346.   பல்லக்கு - சிறுகதை நூல் ஆசிரியர் – ரா.கி.ரங்கராஜன்
347.   பல்லியம் - பலவகை இசைக் கருவிகள்
348.   பவளமல்லிகை சிறுகதையாசிரியர் -கி.வா.ஜகநாதன்
349.   பழமொழி ஆசிரியர்  – முன்றுறையரையனார் –
350.   பழைய உரை இல்லாத எட்டுத்தொகை நூல் – நற்றிணை
351.   பழைய ஏற்பாடு மொழிபெயர்க்கப்பட்ட மொழி – ஹீப்ரு
352.   பழைய சமஸ்கிருத மொழியின் இலக்கண வகை – சொல்லிலக்கணம்
353.   பள்ளு நாடகத்தின் மூலம் – உழத்திப் பாட்டு
354.   பன்னிரண்டாம் திருமுறையைப் பாடியவர் – சேக்கிழார்
355.   பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம் நூலாசிரியர் – ஜெகவீரபாண்டியர்
356.   பாட்டும் தொகையும் எனக் கூறப்படும் இலக்கியம் – சங்கஇலக்கியம்
357.   பாட்டும் தொகையும் பிறந்த காலம் – மூன்றாம் சங்கம்
358.   பாண்டி நன்னாடுடைத்து நல்ல தமிழ் - ஔவையார்
359.   பாண்டிக் கோவை நூல் பாட்டுடைத்தலைவன் – நெடுமாறன்
360.   பாண்டிமாதேவி நாவல் ஆசிரியர் – நா.பார்த்தசாரதி
361.   பாண்டியன் பரிசு ஆசிரியர் பாரதிதாசன்
362.   பாணபுரத்து வீரன் நாடக ஆசிரியர் – சாமிநாத சர்மா
363.   பாதீடு - பங்கிட்டுக் கொடுத்தல்
364.   பாம்பலங்கார வருக்கக் கோவை பாடியவர் – படிக்காசுப் புலவர்
365.   பாரத அன்னைத் திருபள்ளி எழுச்சிப் பாடியவர்பாரதியார்
366.   பாரத சக்தி மகா காவியம் – சுத்தானந்த பாரதியார்
367.   பாரத வெண்பா பாடியவர் - பெருந்தேவனார்
368.   பாரதப் போரில் இருபடைகளுக்கும் உணவளித்த மன்னன்
– பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்
369.   பாரதப்போரில் உணவு வழங்கிய மன்னன்
 – சோழன் குலமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
370.   பாரதிதாசனின் அழகின்சிரிப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் –  பரமேஷ்வரன்
371.   பாரதிதாசனைப் பாவேந்தர் என்றவர் - தந்தை பெரியார்
372.   பாரதியின் கண்ணன் பாட்டு,குயில்பாட்டு,பாஞ்சாலி சபதம்                ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – சேக்கிழார் அடிப்பொடி        என்.இராமச்சந்திரன்
373.   பாரிகாதை நூலாசிரியர் – ரா.ராகவையங்கார்
374.   பாரியின் சிறப்பைப் பாடிய புலவர் – கபிலர்
375.   பாலங்கள் நாவலாசிரியர் - சிவசங்கரி
376.   பாவகையால் பெயர்பெற்ற தொகைநூல் – கலித்தொகை , பரிபாடல்
377.   பாவைகூத்துச் செய்தி இடம்பெற்ற நூல் – குறுந்தொகை   
378.   பிசிராந்தையார் சேரனுக்குத் தூது அனுப்பியது – அன்னச்சேவல்
379.   பிசிராந்தையார் புலவரின் நாடு – பாண்டியநாடு
380.   பிரஞ்சு மொழியை ஆராயத் தோன்றிய முதல் நிறுவனம் – பிரஞ்சு அகாடமி – கி.பி.10
381.   பிரபுலிங்க லீலை ஆசிரியர் - சிவப்பிரகாச சுவாமிகள்
382.   பிரயோக விவேகம் ஆசிரியர் – சுப்பிரமணிய தீட்சிதர் – 17 –ஆம் நூற்றாண்டு
383.   பிள்ளைத்தமிழ்ப் பருவங்கள் – 10
384.   பிறந்ததெப்படியோ? நூலாசிரியர் – தெ.பொ.மீ.
385.   புண்ணுமிழ் குருதி எனும் அடி இடம் பெற்ற நூல் – பதிற்றுப்பத்து
386.   புணர்ச்சி விதியைக் கூறியவர் - புத்தமித்திரர்
387.   புதியதும் பழையதும் நூலாசிரியர் -.வே.சா
388.   புதுக்கவிதை வடிவில் முதன்முதலில் கவிதை எழுதியவர் – ந.பிச்சமூர்த்தி
389.   புதையல் நாவலாசிரியர் - கலைஞர் கருணா நிதி
390.   புராட்டஸ்டண்ட் கிருத்துவர் பயன்படுத்தும் பைபிளை மொழிபெயர்த்தவர் – போவர் -1871
391.   புராணங்கள் எண்ணிக்கை – 18
392.   புலவர் கண்ணீர் நூலாசிரியர்                  - மு.வரதராசன்
393.   புலவர் புராணம் பாடிய ஆசிரியர் - தண்டபாணி சுவாமிகள்
394.   புலியூர் யமக அந்தாதி நூலின் ஆசிரியர் – கணபதி ஐயர்
395.   புறநானூற்றில் அமைந்து வரும் பா –அகவற்பா
396.   புறநானூற்றில் ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள் – 14
397.   புறநானூற்றின்  கிடைக்காத பாடல் – 267,268
398.   புறநானூற்றின் பழைய உரை கிடைத்துள்ள பாடல் எண்ணிக்கை - 260
399.   புறநானூற்றின் பாடல் எண்ணிக்கை – 399+ கடவுள் வாழ்த்து

400.   புறநானூற்றின் பாடலின் அடியளவு – 4 -40 

1 comment:

  1. மாணவர்களுக்கு மிகப்பயனுள்ள பதிவு. பேராசிரியரின் பணி பாராட்டுக்குரியது.

    ReplyDelete